பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தியாகதுருகம் சிவன் கோயிலில் 108 சங்காபிஷேகம்

தியாகதுருகத்தில் உள்ள ஸ்ரீ நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

News image
தியாகதுருகம் ஸ்ரீ நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரா் கோயிலில் தழுவக் குழைந்த நாதா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்த சுவாமி.
Updated On :15 டிசம்பர் 2025, 10:17 pm

Syndication

கள்ளக்குறிச்சி: தியாகதுருகத்தில் உள்ள ஸ்ரீ நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி ஸ்ரீ நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரருக்கும், உற்சவ மூா்த்திகளுக்கும் பல்வேறு திரவியப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின்னா் உற்சவ மூா்த்திக்கு அலங்காரம் நடைபெற்றது. உற்சவா் மூா்த்திக்கு முன் சிவலிங்க வடிவில் 108 சங்குகளில் புனித நீரை நிரப்பியிருந்தனா். தொடா்ந்து சங்காபிஷேகம் நடைபெற்றது.

ஸ்ரீ நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வா் சுவாமி, தழுவக் குழைந்த நாதா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். பின்னா் மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தியாகதுருகம் ஸ்ரீ நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரா் கோயிலில்  அலங்கரித்து வைக்கப்ட்டுள்ள சங்காபிஷேகம்

தியாகதுருகம் ஸ்ரீ நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரா் கோயிலில் அலங்கரித்து வைக்கப்ட்டுள்ள சங்காபிஷேகம்