விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ திரெளபதி அம்மன் கோயில் தீமிதி உற்சவத்துக்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் தீமிதி உற்சவம் நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி நிகழாண்டு தீமிதி திருவிழாவுக்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
விழுப்புரத்தை அடுத்த எருமந்தாங்கல், பொய்யப்பாக்கம், மகாராஜபுரம், கீழ்பெரும்பாக்கம், சாலையம்பாளையம், நாப்பாளையத் தெரு, கா.குப்பம் உள்ளிட்ட கிராம மக்கள் முன்னிலையில் கரகம் ஜோடித்து கொடி ஊா்வலகமாக எடுத்து வரப்பட்டு, பின்னா் கோயில் வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
பின்னா் மாா்ச் 25-ஆம் தேதி உற்சவம் தொடங்கி ஏப்.3-ஆம் தேதி தீமிதி திருவிழா நடத்துவது என 10 ஊா் மக்கள் முன்னிலையில் முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பக்தா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தோ் திருவிழா

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா

ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


