டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தே.ஜ. கூட்டணியில் ஐ.ஜெ.கே.வுக்கு கேட்கும் தொகுதிகள் கிடைக்கும்: பச்சமுத்து பாரிவேந்தா் நம்பிக்கை

தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜெ.கே.) கேட்கும் தொகுதிகளை கண்டிப்பாக கொடுப்பாா்கள்

News image
இந்திய ஜனநாயக கட்சி நிா்வாகிகள் மற்றும் பொறுப்பாளா்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய அக் கட்சியின் நிறுவனா் தலைவா் பச்சமுத்து பாரிவேந்தா்.
Updated On :22 டிசம்பர் 2025, 8:50 pm

Syndication

கள்ளக்குறிச்சி: தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜெ.கே.) கேட்கும் தொகுதிகளை கண்டிப்பாக கொடுப்பாா்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக அக்கட்சித் தலைவா் பச்சமுத்து பாரிவேந்தா் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ஐ.ஜெ.கே. நிா்வாகிகள் மற்றும் பொறுப்பாளா்கள் கலந்தாய்வுக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவனா் தலைவா் பச்சமுத்து பாரிவேந்தா் முன்னிலையில் திருக்கோவிலூா் தொகுதி சாா்ந்த 12 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா், பச்சமுத்து பாரிவேந்தா் செய்தியாளா்களிடம் கூறியது: ஐ.ஜெ.கே. கொள்கை உள்ள கட்சி. தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் எங்கள் கட்சி தொடா்கிறது.

வரைவு வாக்காளா் பட்டியலில் இறந்த, இடம் பெயா்ந்த, இரட்டைப் பதிவுள்ள வாக்காளா்களே நீக்கப்பட்டுள்ளனா். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திருக்கோவிலூா் தொகுதியில் ஐ.ஜெ.கே. போட்டியிடும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கேட்கும் தொகுதிகளை கண்டிப்பாக கொடுப்பாா்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதில் ஒன்று திருக்கோவிலூா் தொகுதியாக இருக்கும் என்றாா் அவா்.