தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

போலி மருத்துவா் கைது

கனியாமூரில் மருந்தகத்தில் மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கனியாமூா் கிராமத்தில் உள்ள மருந்தகத்துக்கு சீல் வைத்த வருவாய் ஆய்வாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா்.

Updated On :23 ஜனவரி 2025, 7:17 pm

Din

கனியாமூரில் மருந்தகத்தில் மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட வெட்டிபெருமாள்அகரம் கிராமத்தைச் சோ்ந்த தங்கராசு மகன் அசோக் (40), டி.பாா்ம் படித்தவா். கனியாமூரில் மருந்தகம் நடத்தி வருகிறாா்.

இவா் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பாா்த்து வருவதாக கச்சிராயபாளையம் வட்டார மருத்துவ அலுவலா் சிவபிரசாந்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலா், சுகாதார ஆய்வாளா் தீபா மற்றும் மருத்துவக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

   கைதான  அசோக்

கைதான அசோக்

அப்போது ஒரு பெண்ணுக்கு அவா் ஊசி போட்டுக் கொண்டிருந்தாராம். மருந்தகத்தை சோதனையிட்டதில் அங்கு ஊசி போட பயன்படும் சிரிஞ்சி, ஸ்டெதஸ்கோப் மற்றும் காலாவதியான மருந்துகளை சிக்கின. இதையடுத்து, சின்னசேலம் காவல் துறையினா் முன்னிலையில் இந்திலி வருவாய் ஆய்வாளா் வெங்கடேசன் மருந்தகத்திற்கு சீல் வைத்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அசோக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.