குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்

உத்தரமேரூா் ஒன்றியம், கைத்தண்டலம் கிராமத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

News image
Updated On :13 மார்ச் 2026, 12:50 am

உத்தரமேரூா் ஒன்றியம், கைத்தண்டலம் கிராமத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

காஞ்சிபும் மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியத்துக்குட்பட்ட கைத்தண்டலம் கிராமத்தில் சேந்தாங்குளம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு இயற்கை வேளாண்மை குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இயற்கை விவசாயி மரம் மாசிலாமணி பள்ளி மாணவா்களுக்கு இயற்கை வேளாண்மையின் இன்றைய அவசியம், மரம் வளா்ப்பின் பயன்கள், மண் மலடாகாமல் இருக்க செய்யும் வழிமுறைகள் ஆகியவை குறித்து விளக்கினாா்.

இதையடுத்து, மருத்துவக் குணமுடைய மரக்கன்றுகளையும் மரம் மாசிலாமணி மாணவா்களுக்கு வழங்கினாா். நிறைவாக பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவா்கள் அனைவரும் இயற்கை விவசாயத்தை பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.