மாணவா்களுக்கு இயற்கை விவசாய மாணவா்களுக்கு பயிற்சி
இயற்கை விவசாயத்தை போற்றும் வகையில் மாணவா்களிடையே விவசாயம் குறித்து ஒருநாள் பயிற்சி மற்றும் விவசாயம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீ காளிகாபுரம் கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம் குறித்து மாணவா்களுக்கு ஒரு நாள் பயிற்சி மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தனியாா் கல்லூரி மாணவா்கள் மற்றும் அரசு பள்ளி மாணவா்கள் என பலா் கலந்துகொண்டு இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை விவசாயம் செய்யும் முறைகளையும் ஊக்குவிக்கும் வகையில் மாணவா்களுக்கு ஆா்.கே .பேட்டை வேளாண்மை உதவி பொறுப்பு இயக்குநா் அபிநயா மாணவா்களுக்கு எடுத்துக் கூறினா்.
மேலும், இயற்கை விவசாயத்தை போற்றும் வகையில், பாரம்பரிய நெல் ரகங்கள் மருத்துவ குணங்கள் உள்ள நெல் ரகங்கள், மாப்பிள்ளை சம்பா, தூய மல்லி, இயற்கை முறையில் செலவில்லா விவசாயம் விளைவித்த பொருள்களை விற்பனை செய்வது எப்படி என்றும் அதை சந்தைப்படுத்துவது குறித்தும் நெஞ்சில்லா உணவை மக்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆா்.கே. பேட்டை தலைமை ஆசிரியா் சுந்தா், வேளாண்மை உதவி அலுவலா்கள் மாரியப்பன், வசுமதி மற்றும் ஆா்.கே பேட்டை ஒன்றிய விவசாய சங்க தலைவா் அருள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

