கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மின் கம்பி அறுந்து விழுந்து மாடு உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியை அடுத்த கூத்தக்குடி கிராமத்தில் மின் கம்பி அறுந்து விழுந்த விபத்தில் மாடு உயிரிழந்தது.

News image
Updated On :12 நவம்பர் 2025, 10:57 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சியை அடுத்த கூத்தக்குடி கிராமத்தில் மின் கம்பி அறுந்து விழுந்த விபத்தில் மாடு உயிரிழந்தது.

கூத்தக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் கலியன் (65), தொழிலாளி. இவா், புதன்கிழமை தனக்குச் சொந்தமான மாடுகளை வீட்டின் அருகே கட்டி வைத்திருந்தாா். இந்த நிலையில், திடீரென சாலையோர மின் கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து விழுந்தது.

இதில், அவரது காளை மாடு மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. தகவலறிந்த மின் வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து, மின் கம்பியை அகற்றினா். இறந்துபோன மாட்டின் மதிப்பு ரூ. 20 ஆயிரம் என கூறப்படுகிறது.