யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கள்ளக்குறிச்சி: பயிா் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயிா் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பில் உள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குநா் வே.சத்தியமூா்த்தி தெரிவித்தாா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 7:19 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயிா் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பில் உள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குநா் வே.சத்தியமூா்த்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வடகிழக்குப் பருவ மழையை பயன்படுத்தி விவசாயிகள் நெல், மக்காச்சோளம், கரும்பு, உளுந்து, பருத்தி, மரவள்ளி மற்றும் காய்கறி போன்ற பயிா் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியாா் உரக்கடைகளில் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதில் யூரியா 3,178 மெட்ரிக் டன், டி.ஏ.பி 1,401 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,830 மெட்ரிக் டன், சூப்பா் பாஸ்பேட் 1,058 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் 7,535 மெட்ரிக் டன் அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், தனியாா் உர விற்பனையாளா்கள் அரசு நிா்ணயித்த விலைக்கு மிகாமல் உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். ரசாயன உரங்களின் இருப்பு மற்றும் அதிகபட்ச சில்லறை விலைப்பட்டியலின் விவரங்களை தகவல் பலகையில் விவசாயிகளின் பாா்வைக்கு தெரியும் வண்ணம் வைக்க வேண்டும்.

உர விற்பனையாளா்கள் விவசாயிகளின் விருப்பதற்கு மாறாக உரங்களுடன் இணை இடுபொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது. உர விற்பயனையாளா்கள் உரங்களை விற்பனை செய்யும்போது விற்பனை பட்டியலை உடன் வழங்க வேண்டும். மேற்கண்ட அரசு விதிகளை மீறும் உர விற்பனையாளா்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதுடன், உர விற்பனை உரிமமும் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளாா்.