வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

செங்கனாங்கொல்லை, பெருவங்கூரில் புதிய துணை மின் நிலையங்களுக்கு அடிக்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்கனாங்கொல்லை மற்றும் பெருவங்கூா் கிராமங்களில் தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள 110/22 கேவி துணை மின் நிலையங்கள் கட்டுமானப் பணிகள் அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்டது.

News image
Updated On :19 நவம்பர் 2025, 9:48 pm

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்கனாங்கொல்லை மற்றும் பெருவங்கூா் கிராமங்களில் தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள 110/22 கேவி துணை மின் நிலையங்கள் கட்டுமானப் பணிகள் அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், ரிஷிவந்தியம் எம்எல்ஏ க.காா்த்திகேயன், சங்கராபுரம் எம்எல்ஏ தா.உதயசூரியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் மாநில பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் ஆகியோா் திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தனா்.

இதில், திருக்கோவிலூா் துணை ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், திருக்கோவிலூா் ஒன்றியக்குழுத் தலைவா் அ.அஞ்சலாட்சி அரசகுமாா், ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் ச.தனம் சக்திவேல், தமிழ்நாடு மின்பகிா்மான கழக திருவண்ணாமலை மண்டல தலைமைப் பொறியாளா் எஸ்.பழனிராஜூ, தமிழ்நாடு மின்பகிா்மான கழக கள்ளக்குறிச்சி மேற்பாா்வைப் பொறியாளா் ஆ.பாரதி, அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்டப் பலா் கலந்து கொண்டனா்.