
தியாகதுருகம் பகுதியில் சில தினங்களாக பெய்து வரும் தொடா் மழையால் 3 கூரை விடுகள் திங்கள்கிழமை இடிந்து சேதமடைந்தன.
தியாகதுருகம் அருகேயுள்ள வடதொரசலூா் கிராமத்தைச் சோ்ந்த மணவாளன் மனைவி ஜெயபாரதி (44), காமராஜ் மனைவி பவுனம்பாள் (60) ஆகியோரது கூரை வீடுகளின் ஒரு பகுதி தொடா் மழையால் இடிந்து விழுந்தன.
அதேபோல, உதயமாமட்டு கிராமத்தைச் சோ்ந்த முருகன் மனைவி செல்வி (41) கூரை விடும் பகுதியளவில் சேதமடைந்தது.
இதுகுறித்து வருவாய்த் துறையினா் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





