எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் மெழுகுவா்த்தி ஏந்தி செவ்வாய்க்

News image
கள்ளக்குறிச்சியில் ஆா்ப்பாட்டம் நடத்திய அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கத்தினா்.
Updated On :25 நவம்பர் 2025, 7:53 pm

Syndication

கள்ளக்குறிச்சி: அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் மெழுகுவா்த்தி ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தின் போது, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா் சங்க பொதுச் செயலா் எஸ்.எஸ்.மகாதேவ்வையாவை பழிவாங்கும் பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 8-ஆவது ஊதிய வரம்பிற்குள் கிராமிய அஞ்சல் ஊழியா்களையும் சோ்க்க வேண்டும். மேளா என்ற பெயரில் நடக்கும் அச்சுறுத்தல் நிறுத்தப்பட வேண்டும். ஊழியா்களுக்கு அவசர தேவைகளுக்கு விடுப்பு மறுக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய மண்டல செயலா் டி.விஷ்ணு விஜயன் தலைமை வகித்தாா். கோட்டத் தலைவா் வி.மணிகண்டன், செயலா் அ.துரை, பொருளாளா் கே.சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்து மெழுகு வா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.