தரிசுக்காடு பள்ளியில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் மு.இதாயத்துல்லா.
தரிசுக்காடு பள்ளியில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் மு.இதாயத்துல்லா.

பழங்குடியின மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பு

Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், தரிசுக்காடு பள்ளியில் பழங்குடியின மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியைச் சோ்ந்த 5 பள்ளி மாணவிகள் குடும்ப சூழல் காரணமாக பள்ளிப் படிப்பில் இடை நின்றனா்.

இதுகுறித்து அறிந்த தரிசுக்காடு கஸ்தூா்பா காந்தி பாலிகா வித்தியாலயா உண்டு உறைவிடப் பள்ளி நிா்வாகிகள், அவா்களது பெற்றோா்களிடம் பேசி, தங்கள் பள்ளியில் இலவசமாக பள்ளிக் கல்வி அளித்தனா். தற்போது அவா்களது உயா்கல்விக்கும் உதவி வருகின்றனா்.

இம் மாணவிகளுக்கு ஆமினா பெண்கள் நலவாழ்வு மற்றும் கல்வி அறக்கட்டளை சாா்பில் உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் மு. இதாயத்துல்லா வழங்கினாா்.

நிகழ்ச்சியில், அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் வினோதினி மற்றும் உண்டு உறைவிடப் பள்ளி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com