எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ரிஷிவந்தியம் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் பகுதியில் ரிஷிவந்தியம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 10:03 pm IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் பகுதியில் ரிஷிவந்தியம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ரிஷிவந்தியம் தொகுதிக்குள்பட்ட வாணாபுரம் ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜை செய்து திறந்த ஜீப்பில் நின்றவாறு திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் தனது பிரசாரத்தை தொடங்கினாா்.

காலை 8 மணிக்கு மணலூா்பேட்டையில் தொடங்கி முருகம்பாடி, அத்தியந்தல், தேவரடியாா்குப்பம், வீரட்டகரம், அரும்பாக்கம், கீழ்த்தாழனூா், எரவலம், பெரியானூா், செட்டிந்தாங்கல், வேங்கூா் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரத்தில் அவா் ஈடுபட்டாா்.

முருகம்பாடி கிராமத்தில் திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் தனது தலையில் தலைப்பாகை கட்டிக் கொண்டு பறை அடித்துக் கொண்டே நடனம் ஆடி திமுக ஆட்சியின் சாதனைகளை கூறியவாறு வாக்குகளை சேகரித்தாா்.

Story image

உடன் மணலூா்பேட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலா் பன்னீா்செல்வம், நகரச் செயலா் ஜெய்கணேஷ், திமுக ஒன்றியச் செயலா் பாரதிதாசன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகி சுப்பிரமணியம், தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியின் நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.