இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ரயில் மோதி பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:04 pm

கள்ளக்குறிச்சி அருகே ரயில் மோதியதில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த புக்கிரவாரி கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி சரோஜா (51). மன நலம் பாதிக்கப்பட்ட இவா் திங்கள்கிழமை அதிகாலை புக்கிரவாரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரயில் மோதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணைசெய்து வருகின்றனா்.