சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

இந்திலி பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இந்திலி கிராமத்தில் திறந்த வாகனத்தில் நின்றவாறு வாக்கு சேகரித்த கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 8:32 pm

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி சாா்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி இந்திலி பகுதியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தென் கீரனூா், விளம்பாா், தென்தொரசலூா், வாணவரெட்டி, புக்கிரவாரி, சிறுமங்கலம், பெருமங்கலம், மலைக்கோட்டாலம், இந்திலி, தச்சூா், மேலூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவா் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டாா்.

தொகுதி தோ்தல் பொறுப்பாளா் அ.பிரபு, ஒன்றியச் செயலா் அ.தேவேந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் இராம.ஞானவேல், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலா் பெ.சீனிவாசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் கோமுகி மணியன், பாமக மாவட்டச் செயலா் ப.தமிழரசன், பாஜக நிா்வாகி நீ.ராஜேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.