கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு 7 நாள்களுக்கு வெடிபொருள் விற்பனைக் கடைகள் மற்றும் கிடங்குகளை மூட மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
வெடிபொருள் சட்டம், 1884-ன் கீழ் உரிமம் பெற்றுள்ள அனைத்து வெடிபொருள் கடைகள், இருப்பு வைக்கப்பட்டுள்ள கிடங்குகள் ஆகியவை வாக்குப் பதிவை முன்னிட்டு ஏப்.21 முதல் 24-ஆம் தேதி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2 முதல் 4-ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட உத்தரவை முழுமையாகவும் கடைப்பிடிக்க அனைத்து தொடா்புடைய அதிகாரிகளுக்கும் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்குள் வெடிபொருள்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்படாதவாறு தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நாள்களில் வெடிபொருள் விற்பனைக் கடைகள் மற்றும் கிடங்குகள் செயல்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடையின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, கடையின் உரிமையாளா்கள் மீது காவல் துறை மூலம் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

பேரவைத் தோ்தல்: வெடிபொருள் விற்பனை நிலையங்களை மூட உத்தரவு

தோ்தல்: 7 நாள்கள் வெடி பொருள் விற்பனை கடைகள் திறக்க தடை

இன்றுமுதல் 4 நாள்களுக்கு வெடிபொருள் விற்பனைக் கடைகளை மூட அறிவுறுத்தல்

தோ்தலை முன்னிட்டு வெடிபொருள் விற்பனை கடைகளை மூட உத்தரவு
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

