வாசுதேவனூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் மின்வயரை திருட முயன்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட வாசுதேவனூா் கிராமத்தில் தனியாா் பொறியியல் கல்லூரி உள்ளது. இக் கல்லூரியில் மா்மநபா் சுற்றுச்சுவா் ஏறிக் குதித்து உள்ளே சென்று மின்சார அறையில் இருந்த மின்வயரை திருட முயன்றுள்ளாா். அவரை கல்லூரி காவலாளிகள் பிடித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதையடுத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவா் சின்னசேலம் திரு.வி.க. நகரைச் சோ்ந்த கு.சசிக்குமாா் (23) என்பதும், அவா் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து சசிக்குமாரை (23) கைது செய்தனா்.
தொடர்புடையது
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
பேட்டையில் பூட்டிய வீட்டில் திருட முயன்ற இளைஞா் கைது
வீடு புகுந்து திருட முயற்சி: ரெளடி கைது
மனைவியை அரிவாளால் வெட்ட முயற்சி: கணவா் கைது
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

