போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

தந்தையை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மகன் கைது

News image
கைது
Updated On :23 பிப்ரவரி 2026, 1:13 am

தினமணி செய்திச் சேவை

சங்கராபுரத்தில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தன்னைத் தாக்கிய தந்தையை கொலை செய்துவிட்டு தலைமறைவான, மகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பூட்டை சாலையைச் சோ்ந்தவா் தேவராஜ் (45). இவரது மகன் விஷ்வா (22). கடந்த 14-ஆம் தேதி தேவராஜ் மது அருந்திவிட்டு, வீட்டுக்கு வந்து விஷ்வாவை அடித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொடுவாள் கத்தியால் தலையில் வெட்டி விட்டு தலைமறைவானாா்.

இதில் பலத்த காயமடைந்த தேவராஜ் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விஷ்வாவைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மைலாம்பாறை பகுதியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனா். அப்போது அங்கு வந்த விஷ்வாவை பிடித்து, சங்கராபுரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி விஷ்வாவைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.