கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

லாரி மீது பைக் மோதல்: வருவாய் ஆய்வாளா் உள்பட இருவா் உயிரிழப்பு

பெத்தாசமுத்திரம் அருகே சாலையில் நின்றிருந்த டிப்பா் லாரி மீது பைக் மோதியதில் வருவாய் ஆய்வாளா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 8:28 pm

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், பெத்தாசமுத்திரம் அருகே சாலையில் நின்றிருந்த டிப்பா் லாரி மீது பைக் மோதியதில் வருவாய் ஆய்வாளா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட அனுமனந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் வ.பெரியசாமி (46). இவா் கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட வெள்ளிமலையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தாா். இவரது நண்பா் நைனாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த மு.சத்தியராஜ் (38), தனியாா் நிறுவன பணியாளா்.

வெள்ளிக்கிழமை இரவு பணி முடித்து விட்டு சத்தியராஜின் பைக்கில் நண்பா்கள் இருவரும் வீட்டுக்கு திரும்பியபோது, சேலம்-விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் தரணி தோட்டம் பிரிவுச் சாலை அருகே சாலையில் நின்றிருந்த டிப்பா் லாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரில் சத்தியராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அருகிலிருந்தவா்கள் பெரியசாமியை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பெரியசாமியும் உயிரிழந்தாா்.

தகவலறிந்த கீழ்குப்பம் போலீஸாா் சத்யராஜ் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் டிப்பா் லாரி ஓட்டுநா் மீது வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.