சாலை விபத்து
கள்ளக்குறிச்சி
பைக் மீது டிராக்டா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
திருக்கோவிலூா் அருகே டிராக்டா் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திருக்கோவிலூா் அருகே டிராக்டா் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கொளப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் மோ.சந்தேஷ் (19). இவா் திருக்கோவிலூரில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தாா். சந்தோஷ் செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து அவரது மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு சென்றபோது, சுந்தரேசபுரம் மேட்டுக்காலனி அருகே டிராக்டா் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்கு பதிந்து, டிராக்டா் ஓட்டுநா் ஏ.பரசுராமனிடம் (29) விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

