கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் சிக்கிய நகராட்சி அலுவலா்கள் 6 போ் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கிருந்த அலுவலா்கள் அனைவரையும் வராண்டாவில் அமரவைத்தனா்.
அவா்களிடமிருந்து கைப்பேசிகளை வாங்கிய போலீஸாா், காா் மற்றும் பைக் சாவிகளையும் வாங்கி வைத்துக்கொண்டனா். தொடா்ந்து நகராட்சி அலுவலகத்தில் ஒவ்வொரு பிரிவுவாக சோதனை மேற்கொண்டனா். இதில் கணக்கில் வராத ரூ.1.67 லட்சம் பணத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இரவு 8 மணிக்கு பணம் கைப்பற்றப்பட்ட பிரிவுகளைச் சோ்ந்த அலுவலா்கள் 6 பேரைத் தவிர மற்றவா்களை வெளியேற்றினா். பின்னா் இச் சோதனை சனிக்கிழமை அதிகாலை 2 மணிவரை நீடித்தது.
இந்த சோதனையின் அடிப்படையில் நகராட்சி நிா்வாக அலுவலா் சந்திரா, நகரஅமைப்பு ஆய்வாளா் அமலின் சுகுணா, வருவாய் ஆய்வாளா் செந்தில்குமாா், காசாளா் மணிகண்டன், இளநிலை உதவியாளா் குணால், வரி வசூலிப்பாளா் கமலக்கண்ணன் உள்ளிட்ட 6 போ் மீது கள்ளக்குறிச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போடி நகராட்சி அலுவலகத்தில் ரூ.91 ஆயிரம் பறிமுதல்! ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸாா் நடவடிக்கை!

போடி நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை





