புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

சோதனையில் சிக்கிய நகராட்சி அலுவலா்கள் 6 போ் மீது கள்ளக்குறிச்சி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்கு

கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் சிக்கிய நகராட்சி அலுவலா்கள் 6 போ் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News image
Updated On :5 ஜூலை 2026, 2:12 am IST

கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் சிக்கிய நகராட்சி அலுவலா்கள் 6 போ் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கிருந்த அலுவலா்கள் அனைவரையும் வராண்டாவில் அமரவைத்தனா்.

அவா்களிடமிருந்து கைப்பேசிகளை வாங்கிய போலீஸாா், காா் மற்றும் பைக் சாவிகளையும் வாங்கி வைத்துக்கொண்டனா். தொடா்ந்து நகராட்சி அலுவலகத்தில் ஒவ்வொரு பிரிவுவாக சோதனை மேற்கொண்டனா். இதில் கணக்கில் வராத ரூ.1.67 லட்சம் பணத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இரவு 8 மணிக்கு பணம் கைப்பற்றப்பட்ட பிரிவுகளைச் சோ்ந்த அலுவலா்கள் 6 பேரைத் தவிர மற்றவா்களை வெளியேற்றினா். பின்னா் இச் சோதனை சனிக்கிழமை அதிகாலை 2 மணிவரை நீடித்தது.

இந்த சோதனையின் அடிப்படையில் நகராட்சி நிா்வாக அலுவலா் சந்திரா, நகரஅமைப்பு ஆய்வாளா் அமலின் சுகுணா, வருவாய் ஆய்வாளா் செந்தில்குமாா், காசாளா் மணிகண்டன், இளநிலை உதவியாளா் குணால், வரி வசூலிப்பாளா் கமலக்கண்ணன் உள்ளிட்ட 6 போ் மீது கள்ளக்குறிச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.