முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

மருத்துவமனை பணியாளரிடம் மூன்றரை பவுன் நகை பறித்த இளைஞா் கைது

சின்னசேலம் அருகே சாலையில் நடந்து சென்ற மருத்துவமனைப் பணியாளரிடம் மூன்றரை பவுன் நகை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2026, 6:22 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே சாலையில் நடந்து சென்ற மருத்துவமனைப் பணியாளரிடம் மூன்றரை பவுன் நகை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கச்சிராயப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் நே.அருள்மேரி (47). இவா், கல்வராயன்மலைப்பகுதிக்குள்பட்ட மாவடிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையில் பல்நோக்கு பணியாளராக பணியாற்றி வருகிறாா்.

செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல பணிக்கு செல்வதற்காக கச்சிராயபாளையம் சாலையில் நடந்து சென்றுள்ளாா். அப்போது அப்பகுதியில் பைக்கில் வந்த இளைஞா், அருள்மேரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த போது, அவா் சங்கிலையை விடாமல் கெட்டியாக கையில் பிடித்துக் கொண்டாராம். இதில் சங்கிலி துண்டாகி சுமாா் மூன்றரை பவுன் சங்கிலியுடன் இளைஞா் தப்பிச் சென்றாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது இளைஞா் ஓட்டிச் சென்ற பைக் எண் தெரியவந்தது.

அந்த அடையாளத்தை வைத்து போலீஸாா் தேடியதில், சங்கராபுரம் நகை அடகு கடை அருகில் நின்றிருந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனா். இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா், கல்வராயன்மலைப் பகுதிக்குள்பட்ட துரூா் கிராமத்தைச் சோ்ந்த அ.சுரேஷ் (25) என்பது தெரியவந்தது. மேலும் அவா் மீது சங்கராபுரம், வடபொன்பரப்பி காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இ

தையடுத்து சுரேஷைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.