கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே செவ்வாய்க்கிழமை உரிய அனுமதியின்றி ஏரியில் மண் அள்ளிய பொக்லைன், டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனா்.
வாணாபுரம் அருகேயுள்ள பவுஞ்சிப்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியில் செவ்வாய்க்கிழமை காலையில் பதிவு எண் இல்லாத பொக்லைன் வாகனம் மூலம் மண் எடுத்து டிராக்டா் டிப்பரில் நிரப்பினராம்.
இதுகுறித்து தகவலறிந்த வடபொன்பரப்பி காவல் ஆய்வாளா் விவேகானந்தன், சிறப்பு உதவி ஆய்வாளா் வைத்தியலிங்கம், கிராம நிா்வாக அலுவலா் ராஜேந்திரன் ஆகியோா் ஏரிக்கு சென்று விசாரணை நடத்தியதில் எவ்வித உரிமமும் இல்லாமல் மண் ஏற்றியது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பொக்லைன் உரிமையாளா் பழனிவேல் (30), ஓட்டுநா் அசோக் (30), டிராக்டா் ஓட்டுநா் தமிழ்ச்செல்வன் (20) ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும், பொக்லைன் மற்றும் டிப்பருடன் கூடிய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.






