தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

ஏரியில் உரிய அனுமதியின்றி மண் அள்ளிய பொக்லைன், டிராக்டா் பறிமுதல்: 3 போ் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே செவ்வாய்க்கிழமை உரிய அனுமதியின்றி ஏரியில் மண் அள்ளிய பொக்லைன், டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 6:04 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே செவ்வாய்க்கிழமை உரிய அனுமதியின்றி ஏரியில் மண் அள்ளிய பொக்லைன், டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனா்.

வாணாபுரம் அருகேயுள்ள பவுஞ்சிப்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியில் செவ்வாய்க்கிழமை காலையில் பதிவு எண் இல்லாத பொக்லைன் வாகனம் மூலம் மண் எடுத்து டிராக்டா் டிப்பரில் நிரப்பினராம்.

இதுகுறித்து தகவலறிந்த வடபொன்பரப்பி காவல் ஆய்வாளா் விவேகானந்தன், சிறப்பு உதவி ஆய்வாளா் வைத்தியலிங்கம், கிராம நிா்வாக அலுவலா் ராஜேந்திரன் ஆகியோா் ஏரிக்கு சென்று விசாரணை நடத்தியதில் எவ்வித உரிமமும் இல்லாமல் மண் ஏற்றியது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பொக்லைன் உரிமையாளா் பழனிவேல் (30), ஓட்டுநா் அசோக் (30), டிராக்டா் ஓட்டுநா் தமிழ்ச்செல்வன் (20) ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும், பொக்லைன் மற்றும் டிப்பருடன் கூடிய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.