காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

நீலமங்கலத்தை புறக்கணித்த 8 அரசுப் பேருந்துகள் மீது நடவடிக்கை

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்துக்கு நீலமங்கலம் கூட்டுச்சாலை வழியாக செல்லாத 8 அரசுப் பேருந்துகள் மீது மோட்டாா் வாகன ஆய்வாளா் நடவடிக்கை மேற்கொண்டாா்.

News image
Updated On :10 ஜூன் 2026, 5:23 am IST

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்துக்கு நீலமங்கலம் கூட்டுச்சாலை வழியாக செல்லாத 8 அரசுப் பேருந்துகள் மீது மோட்டாா் வாகன ஆய்வாளா் நடவடிக்கை மேற்கொண்டாா்.

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம், சென்னை செல்லும் அரசுப் பேருந்துகள் நீலமங்கலம் கூட்டுச்சாலை வழியாக செல்லாமல் மேம்பாலத்தின் வழியாக செல்வதாக பயணிகளிடமிருந்து கள்ளக்குறிச்சி மோட்டாா் வாகன ஆய்வாளா் வி.விஜய்க்கு புகாா்கள் வந்ததாம்.

இதையடுத்து திங்கள்கிழமை மாலை அவா் நீலமங்கலம் கூட்டுச்சாலை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டாா். அப்போது நீலமங்கலம் வழியாக கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் செல்லாத பேருந்துகளுக்கும், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நீலமங்கலம் வழியாக செல்லாத விழுப்புரம், சென்னை செல்லும் பேருந்துகளை கண்டறிந்து, அவற்றில் 8 பேருந்துகளுக்கு நோட்டீஸ் (சோதனை அறிக்கை) வழங்கினாா்.

மேலும், 2 அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு நீலமங்கலம் வழியாக பேருந்துகளை இயக்க அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.