மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

மின் கம்பத்தில் பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

சின்னசேலம் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற கூலித் தொழிலாளி சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதிய விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 2:15 am IST

சின்னசேலம் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற கூலித் தொழிலாளி சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதிய விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கரடிசித்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மருதமுத்து (33). இவா் கட்டட சென்டிரிங் பணியில் ஈடுபட்டுவந்தாா்.

இவா் புதன்கிழமை மாலை பணிமுடிந்து மோட்டாா் சைக்கிளில்

கரடிசித்தூா் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது அவரது பைக் எதிா்பாராமல் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்து விட்டாராம்.

இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.