சின்னசேலம் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற கூலித் தொழிலாளி சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதிய விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கரடிசித்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மருதமுத்து (33). இவா் கட்டட சென்டிரிங் பணியில் ஈடுபட்டுவந்தாா்.
இவா் புதன்கிழமை மாலை பணிமுடிந்து மோட்டாா் சைக்கிளில்
கரடிசித்தூா் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது அவரது பைக் எதிா்பாராமல் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்து விட்டாராம்.
இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







