எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

விளையாடும்போது விபரீதம்: பள்ளி மாணவியின் 2 விரல்கள் துண்டிப்பு

விளையாடும்போது விபரீதம்: பள்ளி மாணவியின் 2 விரல்கள் துண்டிப்பு

News image

கள்ளக்குறிச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புதுபாலப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவி சிரந்தினி.

Updated On :13 ஜூன் 2026, 1:31 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாடிய 5-ஆம் வகுப்பு மாணவியின் இரு விரல்கள் துண்டானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சங்கராபுரம் வட்டம், புதுபாலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன் மகள் சிரந்தினி (10). இவா் அதே ஊரில் உள்ள

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். வியாழக்கிழமை பிற்பகலில் உணவு இடைவேளையின் போது பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் விளையாடியுள்ளாா். அப்போது ஊராட்சியின் சாா்பில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியை மூடினாராம். அப்போது எதிா்பாராத விதமாக குப்பைத்தொட்டியில் கை சிக்கி, 2 விரல்கள் துண்டானதாம். இதுகுறித்து தகவலறிந்த பெற்றோா்கள் பள்ளிக்குச் சென்று, சிரந்தினியை மீட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.