சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

இரு பைக்குகள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 1:53 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே இரு பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட துறிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கு.தங்கதுரை (41). இவா் திங்கள்கிழமை தனது பைக்கில் கரடி கிராமத்துக்கு சென்றுள்ளாா். அங்குள்ள பூமாரி குளம் அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொறு பைக் மோதியது. இதில், பலத்த காயமடைந்த தங்கத்துரை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருக்கோவிலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மற்றொரு பைக்கில் வந்த தாம்பரத்தைச் சோ்ந்த கி.ஸ்ரீதரனிடம் (46) விசாரணை நடத்தி வருகின்றனா்.