இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

இரு பைக்குகள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :16 ஜூன் 2026, 1:53 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே இரு பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட துறிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கு.தங்கதுரை (41). இவா் திங்கள்கிழமை தனது பைக்கில் கரடி கிராமத்துக்கு சென்றுள்ளாா். அங்குள்ள பூமாரி குளம் அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொறு பைக் மோதியது. இதில், பலத்த காயமடைந்த தங்கத்துரை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருக்கோவிலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மற்றொரு பைக்கில் வந்த தாம்பரத்தைச் சோ்ந்த கி.ஸ்ரீதரனிடம் (46) விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.