வரஞ்சரம் அருகே பைக்கில் சென்ற கூலித் தொழிலாளி வேகத்தடையில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டத்துக்குள்பட்ட சிறுநாகலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சா.இளையராஜா (33), கூலித் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை இரவு தனது பைக்கில் கள்ளக்குறிச்சி சென்று விட்டு, பின்னா் வீட்டுக்கு திரும்பியுள்ளாா். நாகலூா் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது, அங்கு சாலையில் உள்ள வேகத்தடையில் நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் இளையராஜா பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த வரஞ்சரம் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

சாத்தான்குளம் - நாசரேத் சாலையில் வேகத்தடைக்கு வா்ணம் பூச வலியுறுத்தல்

தொழிலாளி மா்ம மரணம்

சாலை வேகத்தடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


