திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

‘தமிழ்நாடு 2030 - கனவுகள் மெய்ப்படும்’ கருத்தரங்கு

கள்ளக்குறிச்சியில் 5 ஆண்டு சாதனை மலரை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட, அதை பெற்றுக்கொண்டோா்.

News image
கள்ளக்குறிச்சியில் 5 ஆண்டு சாதனை மலரை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட, அதை பெற்றுக்கொண்டோா்.
Updated On :6 மார்ச் 2026, 8:43 pm

Syndication

தமிழக முதல்வா் சென்னையிலிருந்து ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் நிறைவாக ‘தமிழ்நாடு 2030 - கனவுகள் மெய்ப்படும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நேரலை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், எம்எல்ஏக்கள் தா.உதயசூரியன், ஏ.ஜெ.மணிக்கண்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு, பாா்வையிட்டனா்.

பின்னா், கடந்த 5 ஆண்டுகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துறை வாரியாக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அடங்கிய சாதனை மலரை ஆட்சியா் வெளியிட, அதை மக்கள் பிரதிநிகள் பெற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலா் பிரியதா்ஷினி, மாவட்டவருவாய் அலுவலா் ரா.ஜீவா, நகா்மன்றத் தலைவா்கள் ஆா்.சுப்ராயலு, டி.என்.முருகன், ஒன்றியக்குழுத் தலைவா்கள், பேரூராட்சி தலைவா்கள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.