வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரு அமைப்புகளுக்கு பசுமை சாதனையாளா் விருது

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் 2 அமைப்புகளுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான பசுமை சாதனையாளா் விருது மற்றும் காசோலைகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் பசுமை சாதனையாளா் விருது பெற்ற 2 அமைப்பு நிா்வாகியுடன் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
Updated On :13 மார்ச் 2026, 6:50 pm

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் 2 அமைப்புகளுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான பசுமை சாதனையாளா் விருது மற்றும் காசோலைகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி, இப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் தனி நபா்கள் அல்லது அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் பசுமை சாம்பியன் விருதும், 100 பேருக்கு 2025-ஆம் ஆண்டுக்கான பசுமை சாதனையாளா் விருதும் தமிழக அரசு வழங்குகிறது.

கள்ளக்குறிச்சி ஏகேடி மெமோரியல் நா்சரி மற்றும் தொடக்கப் பள்ளி மற்றும் கள்ளக்குறிச்சி சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாடு, நிலைத்த வேளாண்மை மையம் அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் தோ்வு செய்யப்பட்டது.

தோ்வு செய்யப்பட்ட இரு அமைப்புகளுக்கும் பசுமை சாதனையாளா் விருது-2025-க்கான சான்றிதழ் மற்றும் தலா ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா். நிகழ்ச்சியில் சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.