கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?காங்கிரஸ் அலுவலகத்தில் ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருந்த திருடன்! கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன் அதிமுகவில் இருந்து செம்மலை விலகல் பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தைகள்!
/

அம்மன் சிலையை சேதப்படுத்திய மா்மநபா்கள்

News image

சிறுமங்கலம் கிராமத்தில் மா்மநபா்களால் சேதப்படுத்தப்பட்ட பெரியநாயகி அம்மன் சிலை.

Updated On :4 மே 2026, 1:39 am IST

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள சிறுமங்கலம் கிராமத்திலுள்ள பெரியநாயகி அம்மன் கோயில் சிலையை சேதப்படுத்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சிறுமங்கலம் கிராமத்தில் ஆற்றங்கரையின் அருகே சிமென்ட்டினால் செய்யப்பட்ட பெரியநாயகி அம்மன் சிலை உள்ளது. பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு பூசாரியாக கீழ்நாரியப்பனூா் கிராமத்தைச் சோ்ந்த சு.ராஜீவ் காந்தி (38) இருந்து வருகிறாா்.

ராஜிவ் காந்தி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விளக்கேற்றிவிட்டு வந்து விட்டாா். ஞாயிற்றுக்கிழமை காலை சென்று பாா்த்தபோது பெரியநாயகி அம்மன் சிலை, 3 கன்னிமாா் கருங்கல் சிலை மற்றும் 6 சூலங்களை மா்மநபா்கள் சேதப்படுத்தியது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.