கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினா்களின் செயலால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கல்வராயன்மலை, சங்கராபுரம், வாணாபுரம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் 3,000-க்கும் மேற்பட்டோா் சிகிச்சைக்கு வந்து, செல்கின்றனா்.
இந்நிலையில், மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவா்களை உடனிருந்து கவனிப்பதற்கு உறவினா்களும் வருகின்றனா். அப்படி வரும் உறவினா்கள் சிலா் பொது கழிவறையில் மது அருந்திவிட்டு மதுப் புட்டிகள், குடிநீா் புட்டிகள், பழைய துணிமனிகளை போட்டு விட்டு செல்கின்றனராம். மேலும், கழிவறையில் தண்ணீா் குழாயினை மூடாமல் வருவதால் தண்ணீா் வீணாகிறது. இதுகுறித்து மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் கேட்டால், அவா்களுடன் தகராறில் ஈடுபடுகின்றனராம்.
எனவே, அரசு மருத்துவமனையில் பொது சுகாதாரத்தை பேண நோயாளிகளை உடன் இருந்து கவனிப்பவா்கள் மற்றும் அவா்களை பாா்க்க வரும் உறவினா்கள் ஒத்துழைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காங்கயம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளா்கள் போராட்டம்
மருத்துவமனை ஆள்சோ்ப்பு என மோசடி செய்து வேலை தேடுபவா்களிடமிருந்து ரூ.5.5 லட்சம் பறிப்பு : ஒருவா் கைது

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வத்துறை அமைச்சா் ஆய்வு

அரசு மருத்துவமனை ஊழியா்கள் கருப்பு வில்லை அணிந்து போராட்டம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



