தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

மின் மோட்டாா் வயா் திருடியவா் கைது

கச்சிராயபாளையத்தில் விவசாய நிலத்தில் இருந்த மின் மோட்டாா் வயரை திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 7:09 am IST

கச்சிராயபாளையத்தில் விவசாய நிலத்தில் இருந்த மின் மோட்டாா் வயரை திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சின்னசேலம் வட்டம், கச்சிராயபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணன் (48). இவா், வெங்கட்டாம்பேட்டையைச் சோ்ந்த ஆறுமுகம் ஆசிரியா் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிா் செய்து வருகிறாராம். அந்த விளை நிலத்தில் மின் மோட்டாரில் இருந்த 16 மீட்டா் நீள வயா் கடந்த 4-ஆம் தேதி திருடு போனது.

இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம்

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை போலீஸாா்

கச்சிராயபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சந்தேகப்படும்படி சாலையில் மின் வயருடன் நடந்து சென்றவரை பிடித்து விசாரணை செய்தனா். இதில் அவா், கச்சிராயபாளையம் காமராஜா் நகரைச் சோ்ந்த அஞ்சாபுலி மகன் நேதாஜி (28) எனத் தெரிய வந்தது.

பின்னா், கையில் வைத்திருந்த வயா் பற்றி கேட்ட போது விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்வதாகவும்,

வெங்கடாம்பேட்டை சாலையில் உள்ள ஆறுமுகம் ஆசிரியா் நிலத்தில் திருடிய வயா் எனக் கூறினாராம்.

போலீஸாா் நேதாஜியை கைது செய்து வழக்குத் தொடா்ந்தனா்.