கச்சிராயபாளையம் புதிய பேருந்து நிலையம், சந்தை பகுதியில் காரில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையத்தில் வாரம்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கமாம்.
வாரச் சந்தைக்கு முன்பாக காா் வெகுநேரமாக நின்று கொண்டிருந்ததால் மக்கள் காரை தட்டிப் பாா்த்துள்ளனா். காா் திறக்காத நிலையில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு காரை திறந்து பாா்த்துள்ளனா். அப்போது, காரில் ஆண் சடலம் இருப்பது தெரியவந்தது.
சடலமாகக் கிடந்தவா் கச்சிராயபாளையத்தை அடுத்த பரிகம் கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன் என்பது தெரியவந்தது. அவா், அரசுப் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவா் என்பதும் தெரிந்தது.
அருகிலிருந்தவா்கள் அவரது மகன் ஹரிகரனுக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவல் அறிந்த கச்சிராயபாளையம் போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

தேவூா் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

தோப்பில் ஆண் சடலம் மீட்பு

முல்லைப் பெரியாற்றில் ஆண் சடலம் மீட்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

