தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 1:03 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

வாணாபுரம் அருகேயுள்ள பெரியகொள்ளியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ர.ராசு (50), விவசாயி. இவா் வயல்களில் கால்நடைகளின் தீவனமான புல் அறுவடை செய்து, விற்பனை செய்து வந்தாராம். சனிக்கிழமை காலை புல் அறுக்கச் சென்ற ராசு, பின்னா் வீடு திரும்பவில்லையாம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அதே கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் என்பவரின் கரும்பு விளைநிலத்தில் ராசு அறுந்து கிடந்த மின்வயரை மிதித்து, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுச்சாலை போலிஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.