பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவி, தலைமையாசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

News image

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற கள்ளக்குறிச்சிஅரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி செ.கலைச்செல்விக்கு பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவி மற்றும் 100 சதவீதம் தோ்ச்சி அளித்த அரசுப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாராட்டுத் தெரிவித்தாா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வில் கள்ளக்குறிச்சிஅரசு மாதிரி மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி செ.கலைச்செல்வி பள்ளி அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றாா், மேலும், கரடிசித்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி, நெடுமானூா் அரசு மேல்நிலைப் பள்ளி, எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளி, எலவனாசூா்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏ.குமாரமங்கலம் மாதிரி மேல்நிலைப் பள்ளி, வேலூா் மாதிரி மேல்நிலைப்பள்ளி, கொட்டப்புத்தூா் அரசு மலைவாழ் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிஆகிய 8 அரசுப் பள்ளிகள் பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன.

இதையடுத்து திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாணவி கலைச்செல்வி மற்றும் 8 அரசுப்

பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாராட்டி கேடயங்கள் வழங்கினாா். நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலா் கா.காா்த்திகா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி அளித்த அரசுப் பள்ளி தலைமையாசிரியா்களுடன் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி அளித்த அரசுப் பள்ளி தலைமையாசிரியா்களுடன் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.