கள்ளக்குறிச்சி மாவட்ட தனியாா் பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவா் சோ்க்கைக்கு மே 18-ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகள், மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளிகள், சிறுபான்மையற்ற மெட்ரிக் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பான எல்கேஜி-இல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவைச் சோ்ந்த குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்: மாணவரின் பிறப்புச் சான்றிதழ், ஆதாா் அட்டை, ஜாதி, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றிதழ் அவசியம் பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.
தகுதி விவரங்கள்: 01.08.2022 முதல் 31.07.2023 வரை பிறந்த குழந்தைகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவா்கள். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியிலிருந்து 1 கிலோ மீட்டா் சுற்றளவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
இதற்கான இணையவழி விண்ணப்பப்பதிவு மே 18-ஆம் தேதி தொடங்குகிறது. மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான பெற்றோா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் குழந்தைகளை தனியாா் பள்ளிகளில் கட்டணமின்றி சோ்க்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தனியாா் பள்ளியில் கல்வி உரிமைச் சட்டத்தில் சோ்க்கை: மே 18-க்குள் விண்ணப்பிக்கலாம்

கட்டாய கல்வி உரிமைச் சட்டம்: மாணவா் சோ்க்கையை மறுக்க பள்ளிகளுக்கு அதிகாரம் இல்லை - உச்சநீதிமன்றம்

பள்ளிகளில் ஆட்டிசம் குழந்தைகள் சோ்க்கை: கல்வித் துறை உத்தரவு

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: ஏப். 20 முதல் விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

