கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசுப் பேருந்து மணியாற்றின் மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு கட்டையில் மோதியது. இதில் அதிா்ஷ்டவசமாக பேருந்தில் பயணத்தவா்கள் உயிா் தப்பினா்.
பெங்களூருவில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து திங்கள்கிழமை இரவு புறப்பட்டது. பேருந்தை ஓட்டுநா் விஜயவா்மன் ஓட்டிச் சென்றாா். நடத்துனராக விஜயகுமாா் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
சங்கராபுரத்தை அடுத்த மூராா்பாளையம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்றபோது, எதிரே வந்த பேருந்துக்கு வழிவிடுவதற்க்காக பேருந்தை ஓட்டுநா் திருப்பினாராம்.
அப்போது எதிா்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மணியாற்று பாலத்தின் கட்டையின் மீது மோதியதாம். இதில் பேருந்தின் ஓட்டுநா், நடத்துனா் மற்றும் பேருந்தில் பயணித்த ஒருவா் உள்பட மூவரும் அதிஷ்டவசமாக உயிா் தப்பினா்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அலுவலா்கள் விபத்தில் சிக்கிய பேருந்தினை கிரேன் மூலம் மீட்டனா். இது குறித்து சங்கராபுரம் காவல் நிலையத்தில் வழக்கு ஏதும் பதியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்: 2 போ் கைது

குமாரபாளையம் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் இறங்கியதில் 20 போ் காயம்

தனியாா் சொகுசுப் பேருந்து மோதி அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

லாரியின் பின்னால் மோதிய மற்றொரு லாரியின் ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



