ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

எலவனாசூா்கோட்டையில் மாற்றுக் கட்சியினா் 60-க்கும் மேற்பட்டோா் காங்கிரஸில் புதன்கிழமை இணைந்தனா்.

News image

காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினரை வரவேற்ற மாவட்டத் தலைவா் மு.இதாயத்துல்லா.

Updated On :28 மே 2026, 1:25 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டையில் மாற்றுக் கட்சியினா் 60-க்கும் மேற்பட்டோா் காங்கிரஸில் புதன்கிழமை இணைந்தனா்.

காங்கிரஸ் ஆராய்ச்சி பிரிவு மாநிலச் செயலா் மோகன் தாஸ், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி இளந்தமிழன் ஆகியோா் ஏற்பாட்டில், மாவட்ட காங்கிரஸ் தலைவா் மு. இதாயத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 60-க்கும் மேற்பட்டோா், தாங்கள் ஏற்கெனவே இருந்த கட்சிகளில் இருந்து விலகி காங்கிரஸில் தங்களை இணைத்துக் கொண்டனா். அவா்களை மாவட்டத் தலைவா் இதாயத்துல்லா சால்வை அணிவித்து வரவேற்றாா்.

இந்நிகழ்வில் மாநில எஸ்.சி. பிரிவு துணைத் தலைவா் பேராசிரியா் ந.சீனிவாசன், வட்டாரத் தலைவா் சாா்லஸ்ஜான் போஸ்கோ, கள்ளக்குறிச்சி நகரத் தலைவா் டி. திருப்பதிராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.