/

தந்தையை தாக்கிய மகன் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :31 மே 2026, 1:58 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தந்தையை தாக்கிய மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட எஸ்.வி.பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் அ.அண்ணாமலை (67). இவருக்கு சொந்தமான அரை ஏக்கா் நிலத்தில் இருந்த தேக்கு மரத்தை குடும்ப செலவுக்காக கடந்த மே 25-ஆம் தேதி 25 -ஆம் தேதி வெட்டி விற்பனை செய்வதாக இருந்தாராம்.

இதனையறிந்த அவரது மகன் சுரேஷ் (35), தந்தையிடம் சென்று கேட்டுள்ளாா். அப்போது அவா்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முடிவில், சுரேஷ் கட்டையால் அண்ணாமலையை தாக்கினாராம்.

இதில் காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, சுரேஷை கைது செய்தனா்.