புதுச்சேரி, ஜன. 8: புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் குப்பை அகற்றாமல் இருந்த இடங்களை இத் தொகுதியின் எம்எல்ஏ ஆ. அன்பழகன் சனிக்கிழமை பார்வையிட்டார்.
முருகசாமி தோட்டம், ரயில்வே கேட் ஓரம் உள்ள சாலைகளில் கடந்த 10 நாள்களாக குப்பை வராமல் தேங்கிக் கிடப்பதாக எம்எல்ஏவுக்கு புகார் வந்தது. இதையொட்டி அவர் நகராட்சி ஆணையர் அழகிரி, நகராட்சி சுகாதார அதிகாரி இளங்கோவுடன் சென்று அப் பகுதிகளைப் பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள குப்பைகள் அகற்றப்பட்டன.
குப்பை வாரும் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்கள் தினசரி குப்பை வாருவதை நகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் எம்எல்ஏ கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.