திருமலைராயன்பட்டினத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகளிர் தொழிற்பயிற்சி நிலைய கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை புதுச்சேரி சமூக நலத் துறை அமைச்சர் பி.ராஜவேலு திறந்து வைத்தார்.
மத்திய அரசின் திட்ட நிதியுதவி ரூ. 60 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.ராஜவேலு கலந்து கொண்டு கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி தொழிலாளர் துறை ஆணையர் இ.வல்லவன், கூடுதல் ஆட்சியர் எம்.தினேஷ், பயிற்சி நிலைய முதல்வர் ஜெகதீஸ்சந்திரன், ஆர்.எம்.பைரவன் ஆகியோர் கலந்து கொண்டனர். மத்திய அரசின் திறன் மேம்பாடு, தொழில் முனைவுத் துறை மூலம் நாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,396 தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒன்றான இந்த நிலையத்தின் மேம்பாட்டுக்காக ரூ. 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமானப் பணி செய்யப்பட்டதாகவும், தொழிற்பயிற்சி பெறும் மாணவிகளுக்குத் தேவையான கணிப்பொறிகள், நவீன தையல் இயந்திரங்கள் ரூ.8 லட்சத்தில் அண்மையில் வாங்கப்பட்டு பயிற்சி தரபட்டு வருவதாக நிலையத்தார் தெரிவித்தனர்.
இரவு 10 மணிக்கு நடந்த விழா: தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் கட்டப்பட்ட கட்டடத்தை புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி கலந்து கொண்டு திறந்து வைப்பார் எனவும், விழா நேரம் புதன்கிழமை பிற்பகல் 3 மணி எனவும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முதல்வர் காரைக்கால் வருவது குறித்து தகவல் மாலை 5 மணி வரை உறுதியாகவில்லை.
இதனால் நிகழ்ச்சியை ரத்து செய்துவிடலாமா? எனவும் தொழிலாளர் துறை உயரதிகாரிகள் மத்தியில் ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில், புதுச்சேரியில் இருந்த நலத் துறை பி.ராஜவேலு காரைக்கால் வந்து கொண்டிருப்பதாக தகவல் வந்தது.
இரவு 9.30 மணிக்கு காரைக்கால் வந்த அவர், திருமலைராயன்பட்டினத்துக்கு 10 மணியளவில் சென்று கட்டடத்தை திறந்து வைத்தார்.
முதல்வர் தம்மை மாலை 6 மணியளவில் அழைத்து, காரைக்கால் செல்லும்படி கோரியதாகவும், தேர்தல் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதால் தாமதம் ஏற்பட்டுவிட்டதாகவும், தாமதத்துக்கான வருத்தத்தை அமைச்சர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரஷியா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 12 பேர் பலி

ஐசிஎல் ஃபின்கார்ப் நிறுவனத்தின் கடன் பத்திரங்கள் அறிமுகம்!

ஜார்க்கண்ட் போராட்டம் பற்றிப் பேசாமல் இரட்டை வேடம் போடும் ராகுல் காந்தி: பாஜக கண்டனம்!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! தனித் தீர்மானம் நிறைவேற்றம்! | TN Assembly | TVK
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! தனித் தீர்மானம் நிறைவேற்றம்! | TN Assembly | TVK


