மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஊர்க்காவல் படை வீரர் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு

புதுச்சேரி அருகே பணியில் இருந்த ஊர்க்காவல் படை வீரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:52 am

தினமணி

புதுச்சேரி அருகே பணியில் இருந்த ஊர்க்காவல் படை வீரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
 புதுச்சேரி பாகூர் மணமேடு பகுதியைச் சேர்ந்தவர் மனோ(32), ஊர்க்காவல் படை வீரர். இவர் செவ்வாய்க்கிழமை வில்லியனூர் அரும்பார்த்தபுரத்தில் மணவெளி-ஒத்தவாடை வீதி சந்திப்பில் போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
 அப்போது, அந்த வழியாக ஒரு வழிப்பாதையில் வந்த ஆம்னி காரை மனோ மறித்தார். காரில் வந்த ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேரையும் அவர் தட்டிக்கேட்டு அங்கிருந்து திரும்பி மாற்றுப்
 பாதையில் செல்லுமாறு கூறினார். இதையடுத்து காரில் இருந்து கீழே இறங்கிய 3 இளைஞர்கள் மனோவை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியதுடன் அவரை பணி செய்ய விடாமல் இடையூறு செய்து, செல்லிடப்பேசியை பிடுங்கி உடைத்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.
 இது தொடர்பாக மனோ அளித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.