சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

5 இடங்களில் கைத்தறி குழுமம்: அமைச்சர் ஆலோசனை

புதுச்சேரியில் கைத்தறியை மேம்படுத்த 5 இடங்களில் கைத்தறி குழுமங்கள் அமைப்பது தொடர்பாக சமூகநலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி தலைமையில் புதன்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:15 am

தினமணி

புதுச்சேரியில் கைத்தறியை மேம்படுத்த 5 இடங்களில் கைத்தறி குழுமங்கள் அமைப்பது தொடர்பாக சமூகநலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி தலைமையில் புதன்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.
 கைத்தறியை மேம்படுத்த கைத்தறி குழுமம் அமைக்க, மத்திய அரசு திட்டத்தின்படி செயல்பட புதுவையில் 5 இடங்களில் கைத்தறி குழுமம் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், சட்டப்பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, சட்டப்பேரவை உறுப்பினர் வையாபுரி மணிகண்டன், நெசவாளர் சேவை மைய இயக்குநர் விஷேஷ் நெüட்டியால் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
 அதையடுத்து, காரைக்கால் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு ஆலை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு அரசுச் செயலர் சுந்தரவடிவேலு, தொழிலாளர் நல ஆணையர் வல்லவன், காரைக்கால் தொழிலாளர் நல அதிகாரி சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 அதைத்தொடர்ந்து ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூர் தொகுதிகளில் ரூர்பன் திட்டம் செயல்படுத்துதல் தொடர்பாகவும் அமைச்சர் கந்தசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் அரசு உயர் அதிகாரிகள், அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம் கொம்யூன் அதிகாரிகள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.