இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பளு தூக்கும் வீரருக்கு பாராட்டு

தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற புதுவை வீரர் கி.ஜானி கிருஷ்ணனுக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:00 am

DIN

தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற புதுவை வீரர் கி.ஜானி கிருஷ்ணனுக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.
புதுதில்லியில் தேசிய அளவிலான பளு மற்றும் வலு தூக்கும் போட்டி ஏப்.23 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது.   இதில் புதுவை மாநிலம் சார்பில் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஜானி கிருஷ்ணன் பங்கேற்றார்.  அவர் 62 கிலோ பளு தூக்கும் போட்டியில் 2-ஆவது இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
வெள்ளிப்பதக்கம் வென்ற அவர்,  கடந்த 27-ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமியை சந்தித்தார். அவரை பாராட்டிய முதல்வர், தொடர்ந்து பல வெற்றிகள் குவித்து புதுவைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.