செருப்பில் மறைத்து சிறைக்குள் செல்லிடப்பேசி யாருக்காக கடத்தப்பட இருந்தது என்பது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக முதுநிலை எஸ்.பி. அபூர்வா குப்தா தெரிவித்தார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
கடந்த 5 -ஆம் தேதி புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சூசைராஜ் என்பவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து வரப்பட்டார். அப்போது அவருக்கு செல்லிடப்பேசி கொடுக்க மர்ம நபர்கள் வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் கைதிக்கு செல்லிடப்பேசி கொடுக்க முயன்ற ரெயின்போ நகரைச் சேர்ந்த சங்கர் (25), முத்தியால்பேட்டையைச் சேர்ந்த அப்பு (24), கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த அஜிஸ் (21), திருமால் (19), முகமது பரிது ( 20) ஆகிய 5 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து செருப்பில் மறைத்து வைத்திருந்த செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களை சோதனை செய்தபோது 3 கத்திகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளையும் பறிமுதல் செய்தோம். சூசை ராஜ் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சூசைராஜ் உள்ளிட்ட கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் சிறையில் உள்ள பிரபல ரெüடி தாதா மணிகண்டனின் கூட்டாளிகள்.
கைப்பற்றப்பட்ட செல்லிடப்பேசி மணிகண்டனுக்கு கொடுக்க எடுத்துச் செல்லப்பட்டதா என விசாரணை நடத்தி வருகிறோம்.
புதுச்சேரியில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற தொடர் திருட்டுச் சம்பவங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மிகப் பெரிய திருட்டுக் கும்பல் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். போலீஸாரின் தீவிர ரோந்துப் பணியின் காரணமாக, கடந்த மாதம் திருட்டுச் சம்பவங்கள் குறைந்துள்ளன என்றார் அபூர்வா குப்தா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா: முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

