வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

அரசுப் பள்ளியில் சிறுவர் இலக்கிய சந்திப்பு

புதுச்சேரி அருகேயுள்ள ஏம்பலம் அரசு தொடக்கப் பள்ளியில் சிறுவர் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 9:46 am IST

புதுச்சேரி அருகேயுள்ள ஏம்பலம் அரசு தொடக்கப் பள்ளியில் சிறுவர் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
புதுச்சேரி மூலக்குளம் பாரீசு நகரில் செயல்படும் பாரதி பல்கலை பேரவை சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 
3 மாதங்களுக்கு ஒருமுறை இச்சந்திப்பு நிகழ்ச்சியை பேரவை நடத்தி வருகிறது. 
இந்நிலையில் ஏம்பலம் பள்ளியில் 
48-வது நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறுவர்களின் மேடை அச்சத்தை போக்குவது, அவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணர்வது பேரவையின் நோக்கம். 
நிகழ்ச்சிக்கு மனவளக் கலை பயிற்சி மைய நிர்வாகி பாலமுருகன் தலைமை வகித்தார். 
பேரவையின் இயக்குநர் பாரதிவாணர் சிவா நோக்கவுரை ஆற்றினார்.
பணி நிறைவுபெற்ற தலைமை ஆசிரியர் ந.ஆறுமுகம், சிறுகதை எழுத்தாளர் ராஜேஸ்வரி சிவா ஆகியோர் சிறுவர்களை நெறிப்படுத்தினர். 
திருக்குறள் ஒப்பித்தல், குழுப்பாடல், பாரதியார் ஆத்திச்சூடி, விரும்பிய தலைப்பில் பேசுதல், கதை கூறுதல், ஒளவை ஆத்திச்சூடி, வில்லுப்பாட்டு, பொன்மொழிகள் கூறுதல், நாடம் உள்ளிட்டவற்றில் 60 மாணவ, மாணவிகள் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தினர். இச்சந்திப்பில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கேடயம் வழங்கப்பட்டது. தமிழின் சிறப்பை வெளிப்படுத்திய வில்லுப்பாட்டு குழுவுக்கு குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா நினைவு சுழற்கேடயத்தை பள்ளித் தலைமை ஆசிரியர் வி.ரெங்கநாதன் வழங்கினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.