நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பேரவையில் ஏடுகளை தமிழில் வழங்க உத்தரவு

பேரவையில் ஏடுகளை தமிழில் வழங்க வேண்டும் என்று பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் உத்தரவிட்டார்.

News image
Updated On :5 ஜூன் 2018, 5:27 am

DIN

பேரவையில் ஏடுகளை தமிழில் வழங்க வேண்டும் என்று பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் உத்தரவிட்டார்.
புதுச்சேரி சரக்குகள் மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் அரசு பிறப்பித்த ஆணைகள் கொண்ட ஏடுகள் சட்டப்பேரவையில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. இந்த ஏடுகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக பேரவைக்குழுத் தலைவர் ஆ.அன்பழகன், பேரவையில் ஏடுகள் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளன. எதுவும் தமிழில் இல்லை. 
தமிழை அரசு புறக்கணிக்கிறதா? தமிழுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை. தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறதா, இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், பேரவையில் வைக்கப்பட்ட அனைத்து ஏடுகளையும் உடனடியாக தமிழாக்கம் செய்து தரவேண்டும் என்று உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.