அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

இலவசமாக மது கொடுக்க மறுத்த காசாளரை பீர் புட்டியால் குத்திய இளைஞர் கைது

இலவசமாக மது கொடுக்க மறுத்த மதுக் கடையின் காசாளரை பீர் புட்டியால் குத்திய இளைஞர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டா

Updated On :5 நவம்பர் 2018, 8:55 am IST

இலவசமாக மது கொடுக்க மறுத்த மதுக் கடையின் காசாளரை பீர் புட்டியால் குத்திய இளைஞர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
 புதுச்சேரி கோட்டக்குப்பம் அருகே சின்ன முதலியார்சாவடி மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சரவணன் (39). இவர் பாகூர் அருகே சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மதுபானக் கடையில் காசாளராக வேலை செய்து வருகிறார்.
 இந்த நிலையில், சனிக்கிழமை மதுக் கடையில் சரவணன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போது, அந்த மதுக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்த நெல்லிக்குப்பம் அருகே வெள்ளப்பாக்கம் புதுக் காலனியைச் சேர்ந்த மணி (24), மது போதையில் சரவணனிடம் இலவசமாக மது கேட்டாராம். சரவணன் மது கொடுக்க மறுத்துவிட்டதால், மணி அங்கிருந்த காலி பீர் புட்டியை எடுத்து சரணவனை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
 இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சரவணன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், பாகூர் காவல் உதவி துணை ஆய்வாளர் திருமால் வழக்குப் பதிவு செய்து, மணியை கைது செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.